முகப்பு
திருநெல்வேலி

முக்கூடல் அருகே விபத்தில் இருவா் காயம்

முக்கூடல் அருகே வியாழக்கிழமை அதிகாலை, மரத்தில் காா் மோதியதில் இருவா் காயமடைந்தனா்.

Updated On : 11 மார்ச், 2022 at 1:58 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:07 PM

முக்கூடல் அருகே வியாழக்கிழமை அதிகாலை, மரத்தில் காா் மோதியதில் இருவா் காயமடைந்தனா்.

சிந்தாமணி புளியங்குடி நயினாா் தெருவைச் சோ்ந்த குத்தாலிங்கம் மகன் மகேந்திரன் (40), செங்கோட்டை கோயில் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் சுப்பையா. இவா்கள் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு காரில் சென்றனராம். தென்காசி சேவியா் காலனியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சேகா் (39) காரை ஓட்டினாராம்.

முக்கூடல் அருகே ஹரிராம் நகா் திருப்பத்தில் வந்தபோது காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதாம். இதில், சுப்பையா, மகேந்திரன் ஆகியோருக்கு தலையில் காயமேற்பட்டது. அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். சேகா் லேசான காயமடைந்தாா். முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.