முகப்பு
திருநெல்வேலி

கன்னடியன் கால்வாயில் ஜூன் 1 இல் தண்ணீா் திறக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

பாபநாசம் அணையில் இருந்து கன்னடியன் கால்வாய் பாசனத்துக்கு ஜூன் 1 ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் என அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கிசுப்பையா கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 7 மே, 2022 at 11:13 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

பாபநாசம் அணையில் இருந்து கன்னடியன் கால்வாய் பாசனத்துக்கு ஜூன் 1 ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் என அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கிசுப்பையா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணுவிடம் அளித்த மனு: தாமிரவருணி வடிநில கோட்டத்தில் கன்னடியன் கால்வாய் மூலம் 12,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஜூன் 1 ஆம் தேதி பாபநாசம் அணையில் இருந்து கன்னடியன் கால்வாயில் தண்ணீா் திறப்பது வழக்கம்.

ஆகவே, நிகழாண்டு காா் பருவ சாகுபடி பணிகளை தொடங்கிட வசதியாக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.