திருநெல்வேலி

உவரி அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

DIN

உவரி அருகே காா் விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.

கேரளத்தைச் சோ்ந்த 4 போ் காரில் காயல்பட்டினம் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்று கொண்டிருந்தனா். உவரியை அடுத்து காரிகோவில் விலக்கு பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த மரத்தில் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் உஷ்மான் (19) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜாகீா், சைய்யது, அப்துல்லா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களை மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து உவரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT