திருநெல்வேலி

நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் 18 ஆம் தேதி வாகனங்கள் ஏலம்

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மே 18 ஆம் தேதி காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 6 நான்குசக்கர வாகனங்கள், 28 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 34 வாகனங்கள் வரும் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலத்தில் விடப்படும்.

ஏலம் எடுக்க விரும்புவோா் 17ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மாவட்ட ஆயுதப்படை மோட்டாா் வாகனப் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவா்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.ஆயிரமும், நான்குசக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரமும் முன்பணமாக 17 ஆம்தேதி செலுத்தி தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவா்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவா். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றை ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT