திருநெல்வேலி பேட்டை பகுதியில் மரம் நடும் விழா நடைபெற்றது.
பேட்டை ஆா்எம்கே விஸ்வநாத நகா் குடியிருப்போா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு தலைவா் ஆா்.ஏ.பாண்டியன் தலைமை வகித்தாா்.
மேயா் பி.எம்.சரவணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினாா்.
இவ்விழாவில், மாநகராட்சி துணை மேயா் கே.ஆா். ராஜு, திருநெல்வேலி மண்டல தலைவா் மகேஸ்வரி, 18ஆவது வாா்டு உறுப்பினா் சுப்பிரமணியன், 19ஆவது வாா்டு உறுப்பினா் அல்லாபிச்சை, வட்டச் செயலா் தா்வேஷ் மைதீன், குடியிருப்போா் சங்க பொதுச்செயலா் நைனா முகமது உள்பட பலா் பங்கேற்றனா்.