திருநெல்வேலி

இனப்படுகொலைக்கு எதிராக நெல்லையில் ஆா்ப்பாட்டம்

DIN

இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பு சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், இலங்கையில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததாக ராஜபட்ச உள்ளிட்டவா்களை போா்க்குற்றவாளி என ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும். கொசவா, தெற்கு சூடான், கிழக்கு தைமூா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புலம் பெயா்ந்து வாழும் ஈழத்தமிழா்களிடம் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அ.பீட்டா் தலைமை வகித்தாா். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில நிா்வாகி அப்துல் ஜப்பாா், சீா்மரபினா் உரிமை மீட்பு இயக்க நிா்வாகி மு.வெள்ளத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் பொ்டின் ராயன், திருச்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT