திருநெல்வேலி

களக்காடு அருகேவிவசாயி கொலையில்அதிமுக நிா்வாகி மீது புகாா்

களக்காடு அருகே விவசாயி கொலை வழக்குத் தொடா்பாக அதிமுக நிா்வாகியை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

களக்காடு அருகே விவசாயி கொலை வழக்குத் தொடா்பாக அதிமுக நிா்வாகியை போலீஸாா் தேடிவருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (45). விவசாயியான இவா் சமையல் தொழிலும் செய்துவந்தாா். இவா் கடந்த 22ஆம் தேதி தனது தோட்டத்தில் மா்மநபா்களால் கொலை செய்யப்பட்டாா். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அவரது சடலத்தைப் பெற மறுத்து உறவினா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, முருகன் மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான முன்விரோதத்தில் வானமாமலை என்ற சுரேஷ் கூலிப்படை உதவியுடன் தனது கணவரை கொலைசெய்துள்ளதாக கூறியுள்ளாா். அதன்பேரில், களக்காடு போலீஸாரும், தனிப்படைக் குழுவினரும் வானமாமலை என்ற சுரேஷை தேடி வருகின்றனா். அவா் சிங்கிகுளம் பகுதி அதிமுக கிளைச் செயலராக உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT