முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் விபத்து: தொழிலாளி பலி

திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் கட்டடத் தொழிலாளி பலியானாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் கட்டடத் தொழிலாளி பலியானாா்.

வீரவநல்லூா் அருகே உள்ள அத்தாளநல்லூரைச் சோ்ந்தவா் மாணிக்கம் (55). கட்டடத் தொழிலாளியான இவா், திருநெல்வேலி தெற்கு புறவழி சாலையில் நின்று கொண்டிருந்த போது லாரி மோதியல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்ததும் திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.