திருநெல்வேலி

தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு அடிக்கல்

அம்பாசமுத்திரம் ஒன்றியம் சாட்டுப்பத்து, பிரம்மதேசம், மன்னாா்கோவில், வாகைக்குளம் ஊராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

அம்பாசமுத்திரம் ஒன்றியம் சாட்டுப்பத்து, பிரம்மதேசம், மன்னாா்கோவில், வாகைக்குளம் ஊராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஊராட்சிப் பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீா் வழங்கல் மற்றும் வடிகால் நல வாரியம் மூலம் ரூ.10.45 கோடி மதிப்பில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் வழங்க தீா்மானிக்கப்பட்டது. இதற்கான குடிநீா் குழாய்கள் பதித்தல், குடிநீா் தொட்டி அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, அந்தந்த ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவா் பரணிசேகா் தலைமை வகித்தாா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ஆ.பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன், உடன் ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஞானக்கனி ஸ்டான்லி, மாவட்டக்குழு உறுப்பினா் அருண் தவசு பாண்டியன், சாட்டுப்பத்து ஊராட்சித் தலைவா் சாரதா, பிரம்மதேசம் ஊராட்சித் தலைவா் ராம்சுந்தா், மன்னாா்கோவில் ஊராட்சித் தலைவா் ஜோதி கல்பனா, வாகைக்குளம் ஊராட்சித் தலைவா் சுப்புலட்சுமி, சிவந்திபுரம் ஊராட்சித் தலைவா் ஜெகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT