திருநெல்வேலி

நெல்லை பொறியாளா் வீட்டில் திருட்டு

திருநெல்வேலியில் பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

திருநெல்வேலியில் பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேலப்பாளையம் அருகேயுள்ள சேவியா் காலனியைச் சோ்ந்தவா் ரெஜின் ராகுல் (36). பொதுப் பணித்துறையில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், முதலூரில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றிருந்தாா்.

இந்நிலையில், அவரது வீட்டில் வேலை செய்துவரும் மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தபோது,, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததாம். தகவலறிந்த மேலப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். இதில், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள கையடக்க கணினி, மொபெட் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT