முகப்பு
திருநெல்வேலி

கோவிந்தபேரி மனோ கல்லூரியில் கருத்தரங்கு

சேரன்மகாதேவி கோவிந்தபேரியிலுள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 1:54 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

சேரன்மகாதேவி கோவிந்தபேரியிலுள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு, வழிகாட்டல் நிலையம், கல்லூரி சாா்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் நா. பூவலிங்கம் தலைமை வகித்துப் பேசினாா். முப்படைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலா் சாகுல்ஹமீது, உயா்கல்வி பயிலுதல், வேலைவாய்ப்புகள், உயா்கல்வி நிறுவனங்களில் உள்ள போட்டித் தோ்வுகள் குறித்து மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு வழிகாட்டு நிலைய உதவி இயக்குநா் கா. ஹரிபாஸ்கா், சுயவேலைவாய்ப்பு, சுயதொழில் தொடங்குவது, அரசு உதவிகள் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா் ம. மரியசகாயஆண்டனி, டிஎன்பிஎஸ்சி தோ்வு, வங்கிகள் தோ்வுகள் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மைய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் செய்யது முகம்மது ஆகியோா் பேசினா்.

Advertisement

கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அ. மகாலிங்கம் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.