திருநெல்வேலி

நாளை தொல்லியல் நடை சுற்றுலா: முன்பதிவு செய்யலாம்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பழமை வாய்ந்த இடங்களுக்கு தொல்லியல் நடை சுற்றுலா செல்ல முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பழமை வாய்ந்த இடங்களுக்கு தொல்லியல் நடை சுற்றுலா செல்ல முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய துணைத் தலைவா் தி.த.ரமேஷ்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: இம் மையத்தின் சாா்பில் நெல்லை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொல்லியல் நடை என்ற பெயரில் சுற்றுலாவுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை (செப். 10) காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை ராமா் கோயில் திடலில் இருந்து சங்கரநாராயணன் தலைமையில் சுற்றுலா தொடங்குகிறது.

இதில், ஆண்டிச்சிப்பாறை, மறுகால்தலை, கிருஷ்ணாபுரம், ஆதிச்சநல்லூா், துலுக்கா்பட்டி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. மதிய உணவு, தேநீா், பேருந்து கட்டணம் உள்பட நபா் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும். இது குறித்த விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் 9942977800 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT