திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் வேன்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

DIN

சேரன்மகாதேவியில் வேன்-பைக் மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை திம்மராஜபுரம் மேலூா் பகுதியைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் சுந்தரராஜன் என்ற சுரேஷ் (24). இவா் வெள்ளிக்கிழமை பைக்கில் சேரன்மகாதேவிக்கு வந்து விட்டு பாளையங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தாராம்.

சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரி அருகே சென்றபோது, சேரன்மகாதேவி நோக்கி வந்த வேன் பைக் மீது மோதியதாம். இதில் சுந்தரராஜன் என்ற சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

SCROLL FOR NEXT