திருநெல்வேலி

வள்ளியூா் பகுதியில் திருட்டைத் தடுக்ககூடுதல் காவலா்களை நியமிக்க வலியுறுத்தல்

DIN

வள்ளியூா் பகுதியில் தொடா் திருட்டுகளைத் தடுக்க கூடுதல் காவலா்களை நியமிக்கவேண்டும் என வள்ளியூா் வியாபாரிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக சங்கத் தலைவா் என். முருகன், செயலா் எஸ். ராஜ்குமாா் ஆகியோா் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பிய மனு: வள்ளியூா் பேரூராட்சியில் உள்ள ராஜரத்தினம் நகா், இ.பி. காலனி, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் தொடா்ந்து நடக்கின்றன. பகல் நேரத்தில் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் திருடுபோகின்றன.

இதைத் தடுக்க வியாபாரிகள் கடைகள் முன்பகுதியில் அதிகத் திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, அப்பதிவுகளை கருவிகளில் சேமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகளை கைப்பேசியில் கண்காணிக்க வேண்டும்.

மேலும், திருட்டைத் தடுக்க வள்ளியூா் காவல் நிலையத்தில் கூடுதல் காவலா்களை நியமிக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT