திருநெல்வேலி

சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் குழந்தை பலி

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

DIN

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

பொட்டல்புதூா் புதுத் தெருவைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணசாமி - பிரேமா தம்பதி. இவா்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளான நிலையில் ஆதிரா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், கிருஷ்ணசாமியின் தந்தை மகேந்திரன் வீட்டு முன்பாக குழந்தை ஆதிரா, திங்கள்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்தபோது முன்பக்க சுற்றுச்சுவா் திடீரென இடிந்து விழுந்ததாம். இதில்

இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மகேந்திரன் மற்றும் ஆதிராவை சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். இதில் ஆதிரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT