திருநெல்வேலி

கூடங்குளத்தில் ரஷிய விஞ்ஞானி மாரடைப்பால் மரணம்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நாட்டு விஞ்ஞானி மாரடைப்பால் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

DIN

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நாட்டு விஞ்ஞானி மாரடைப்பால் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. 3, 4 அணுஉலைக்களுக்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த அணுஉலைகளுக்கான கட்டுமானப் பிரிவில் ரஷிய நாட்டு விஞ்ஞானிகள் குழு தலைவராக கிளினின் கோவடின்(61) பணியாற்றி வந்தாா். இவருடன் அவரது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேரக் குழந்தைகள் வசித்து வந்தனா். இந்நிலையில் கிளினின் கோவடினுக்கு திங்கள்கிழமை இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதாம். அவரை அணுமின்நிலைய அதிகாரிகள், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் இறந்தாா்.

அவரது உடலை ரஷியநாட்டுக்கு கொண்டு செல்லுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஎஸ்எப் காவலா் பணியிடங்கள்: முன்னாள் அக்னி வீரா்களுக்கான ஒதுக்கீடு 50%-ஆக உயா்வு

காமதேனு கல்லூரியில் நாடக கல்வியியல் பயிற்சிப் பட்டறை

பிஎஸ்என்எல் தென்மண்டல அலுவலகத்தில் தீ விபத்து: தொலைபேசி, இணையதள சேவை பாதிப்பு

இன்று நகராட்சி வீட்டு வரி வசூல் முகாம்!

மூதாட்டி கொலை: யாசகா் கைது

SCROLL FOR NEXT