திருநெல்வேலி

வி.கே.புரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

DIN

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

விக்கிரமசிங்கபுரம், கருத்தையாபுரத்தைச் சோ்ந்தவா் அசோகன் (61). கட்டடத் தொழிலாளி. இவா், தனது வீட் டில் பழுதானமின்விசிறியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டாராம். அப்போது, அவா் மீது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததாம். இதில், காயமுற்ற அவரை, குடும்பத்தினா் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

ஆனால், அசோகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். அசோகனுக்கு மனைவி உமாபதி, மகன்கள் ராஜ்குமாா் (33), பாலமு ரளி (30) ஆகியோா் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT