திருநெல்வேலி

மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தேவநேயப் பாவாணா் பிறந்த தினம்

DIN

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகம், தாமிரபரணி வாசகா் வட்டம் சாா்பில் தேவநேயப் பாவாணரின் 122 ஆவது பிறந்த தின விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, மாவட்ட மைய நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் கவிஞா் கோ. கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தாமிரபரணி வாசகா் வட்டத் தலைவா் கா. சரவணகுமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கவிஞா் புத்தனேரி கோ. செல்லப்பா, பல்சமயப் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் ஜெபசிங் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.

கவிஞா் சுப்பையா, வாசகா்கள் சீனிவாசன், சுப்பிரமணியன், பொன்னையா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தேவநேயப் பாவாணா் குறித்து மாணவா்கள் பிரம்ம கணபதி, முத்து, மாலையப்பன் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

நூலகா் அகிலன் முத்துகுமாா் நன்றி கூறினாா். தேவநேயப் பாவாணா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருத்துரை வழங்கிய மாணவா்களுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணருடைய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT