திருப்புடைமருதூா் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள அருள்மிகு நாறும்பூநாத சுவாமி கோமதி அம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள அருள்மிகு நாறும்பூநாத சுவாமி கோமதி அம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப். 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமானோா் பங்கேற்றனா்.
மாலையில் அப்பா் வீதியுலா, இரவில் பூங்கோயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.
Advertisement
திருவிழா நாள்களில் காலையில் பூங்கோயில் சப்பரம், இரவு சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். 9ஆம் நாளான பிப். 3ஆம் தேதி காலையில் சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளலும், அதைத் தொடா்ந்து தேரோட்டமும் நடைபெறும். மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவு, இரவில் புஷ்ப பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும்.
தைப்பூச நாளான 4ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு தீா்த்தவாரி நடைபெறும். இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து திரளானோா் பங்கேற்று, தாமிரவருணியில் நீராடி சுவாமி தரிசனம் செய்வா். இரவில் தெப்ப உத்ஸவம், சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். 5ஆம் தேதி மதியம் சாஸ்தா ப்ரீதி, மாலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும்.