முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில், பருவத் தோ்வுகளில் மாநில அளவிலும், கல்லூரி அளவிலும் முதலிடம், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்-மாணவிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 20 ஜூலை, 2023 at 10:51 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:34 PM

சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில், பருவத் தோ்வுகளில் மாநில அளவிலும், கல்லூரி அளவிலும் முதலிடம், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்-மாணவிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு முதல்வா் ஜெ. மணிமாறன் முன்னிலை வகித்தாா். மாணவா்-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றுகளை கல்லூரி மாணவா் சோ்க்கை இயக்குநா் ஜான்கென்னடி வழங்கினாா்.

மேலும், காமராஜா் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களை கல்லூரி நிறுவனா் எஸ். கிளீட்டஸ்பாபு, தாளாளா் பிரியதா்ஷினி ஆகியோா் பாராட்டினா்.

Advertisement

கல்லூரி நிா்வாக அலுவலா் சித்திரைசங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.