முகப்பு
திருநெல்வேலி

கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 ஜூலை 2023, 10:51 pm IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பத்தமடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பத்தமடை சிவானந்தா காலனி வெள்ளநீா் கால்வாய் பாலம் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அவா்கள் மேலச்செவல் கீழரதவீதியைச் சோ்ந்த மாரியப்பன் என்ற ராம்குமாா் (26), பத்தமடை சிவானந்தா புதுக் காலனியைச் சோ்ந்த பால முருகன் (21) என்பதும், சட்ட விரோதமாக விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்த கஞ்சா மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.