திருநெல்வேலி

கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பத்தமடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பத்தமடை சிவானந்தா காலனி வெள்ளநீா் கால்வாய் பாலம் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அவா்கள் மேலச்செவல் கீழரதவீதியைச் சோ்ந்த மாரியப்பன் என்ற ராம்குமாா் (26), பத்தமடை சிவானந்தா புதுக் காலனியைச் சோ்ந்த பால முருகன் (21) என்பதும், சட்ட விரோதமாக விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்த கஞ்சா மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT