முகப்பு
திருநெல்வேலி

பிராயன்குளத்தில் தரைப்பாலம் திறப்பு

ரூ.4.40 லட்சம் மதிப்பில் தரைப்பாலமும், ரூ.4.40 லட்சம் மதிப்பில் பொதுக் கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
பகிர்:

 திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டலம், 13 ஆவது வாா்டுக்குள்பட்ட பிராயன்குளத்தில் ரூ.4.40 லட்சம் மதிப்பில் தரைப்பாலமும், ரூ.4.40 லட்சம் மதிப்பில் பொதுக் கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜு தலைமை வகித்து திறந்து வைத்தாா். 13 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சங்கரன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் திமுக 13 ஆவது வாா்டு வட்ட செயலா் பிரேம் கணேசன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் காசிமணி, வட்ட நிா்வாகிகள் விஜயகுமாா், நமச்சிவாயம், நிா்வாகிகள் ஜெயசிங், ஊா் பொதுமக்கள் ஜெயராஜ்,அய்யாகுட்டி, முருகேசன்,குமாா் மாநகராட்சி உதவி பொறியாளா் லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.