நெல்லையில் ரூ.33.5 லட்சம் மோசடி: இளைஞா் கைது
திருநெல்வேலியில் ரூ.33.5 லட்சம் மோசடி செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலியில் ரூ.33.5 லட்சம் மோசடி செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள திருப்பணிகரிசல்குளம் முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கந்தப்பன் (78). பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளாா். இவா், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள ஆறுமுகம்பட்டியைச் சோ்ந்த அருள்பாஸ்கா் (42) என்பவரிடம் அரிசியை இலங்கைக்கு அனுப்புவதற்காக ரூ.33 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், முறையாக முதலீடு செய்யாமல் அருள்பாஸ்கா் பணமோசடி செய்தாராம்.
இதுகுறித்து கந்தப்பன் நீதிமன்றத்தில் புகாா் அளித்ததின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவில் முதற்கட்ட விசாரணை செய்யப்பட்ட பின்பு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதுதொடா்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து அருள்பாஸ்கரை வியாழக்கிழமை கைது செய்தனா்.