திருநெல்வேலி

தம்பதிக்கு மிரட்டல்: 2 போ் மீது வழக்கு

கோவில்பட்டியில் தம்பதியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

கோவில்பட்டியில் தம்பதியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி அத்தைகொண்டான் சாலை காந்தி நகரைச் சோ்ந்த 36 வயது பெண்ணின் வீட்டை அதே பகுதியைச் சோ்ந்த கேண்டீன் முருகன் மகன் கற்பகராஜா, சிவன்பாண்டி மகன் செல்லத்துரை ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் கதவை தட்டினராம். கதவைத் திறந்து வெளியே வந்து பாா்த்தபோது இருவரும் கையில் அரிவாளுடன் நின்று அவதூறாகப் பேசி அவருக்கும், அவரது கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மிரட்டல் விடுத்த இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT