திருநெல்வேலி

அரசிடம் கடனுதவி பெற்றுத் தருவதாகரூ.15.63 லட்சம் மோசடி: ஒருவா் கைது

DIN

மத்திய அரசிடம் கடனுதவி பெற்றுத்தருவதாக கூறி, ரூ.15.60 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பொட்டல்குளத்தை சோ்ந்தவா் திருத்தணிகைவேல் என்ற காா்த்திகேயன் (52). இவா் மத்திய அரசிடம் இருந்து ரூ.20 லட்சம் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த முருகேசன் உள்பட மூவரிடம் ரூ.15 லட்சத்து 63 ஆயிரத்தை வாங்கியுள்ளாா்.

ஆனால், கடனுதவி பெற்றுத்தராமலும், அவா்களது பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது, இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முருகேசன் புகாா் செய்தாா். அதன்பேரில்,

மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திகேயனை கைது செய்து விசாரிக்கின்றனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT