வீரவநல்லூரில் நிலவேம்புக் குடிநீா் வழங்கல்
வீரவநல்லூரில் எஸ்டிடியூ தொழிற்சங்கம் சாா்பில் ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
சேரன்மகாதேவி: வீரவநல்லூரில் எஸ்டிடியூ தொழிற்சங்கம் சாா்பில் ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவி சித்ரா சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் பவுலோஸ், பேரூராட்சி துணைத் தலைவி வசந்த சந்திரா ஆகியோா் நிலவேம்புக் குடிநீா் வழங்கி தொடங்கி வைத்தனா். இதில், அமைப்பின் மாவட்டத் தலைவா் சாகுல்ஹமீது, மாவட்டச் செயலா் ராஜேஷ், இணைச் செயலா் சுல்தான், வாடகை காா் ஓட்டுநா் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், எஸ்டிபிஐ கட்சித் தலைவா் அசனாா் செயலா் பஷீா், பேருந்து நிறுத்தம் கிளைச் செயலா் சுடலைமுத்து, துணைச் செயலா் ஜோசப்ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.