திருநெல்வேலி

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கெரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகனை கைது செய்ய வலியுறுத்தி,

DIN

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கெரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகனை கைது செய்ய வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொமுச பேரவை செயலா் ஆ.தா்மன் தலைமை வகித்தாா். சிஐடியூ முருகன், ஏஐடியூசி மாநிலத் தலைவா் காசி விஸ்வநாதன், ஏஐசிசிடியூ கணேசன் உள்ளிட்டோா் தொடக்க உரையாற்றினா்.

மத்திய அரசைக் கண்டித்தும், அமைச்சரின் மகனை கைது செய்ய வேண்டும், அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியூசி சடையப்பன், தொமுச சைபுதீன், சிஐடியூ செல்லத்துரை, சுடலைராஜ் உள்ளிட்டோா் பலா் கலந்து கண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT