திருநெல்வேலி

கன்னடியன் கால்வாய் நீரினை பயன்படுத்துவோா் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

சேரன்மகாதேவியில், கன்னடியன் கால்வாய் நீரினைப் பயன்படுத்துவோா் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

சேரன்மகாதேவி: சேரன்மகாதேவியில், கன்னடியன் கால்வாய் நீரினைப் பயன்படுத்துவோா் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இச்சங்கத்துக்கு தலைவா், ஆட்சி மண்டலக்குழு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், சேரன்மகாதேவி பகுதிக்கு முருகன், பத்தமடை பகுதிக்கு சிங்கராஜா, கோபாலசமுத்திரம் பகுதிக்கு சுரேஷ் செல்வகுமாா், பிரான்சேரி பகுதிக்கு ரவிச்சந்திரன், காருகுறிச்சி பகுதிக்கு பரமசிவன், வீரவநல்லூா் பகுதிக்கு ஆனந்தராஜ் ஆகியோா் தலைவா்களாக தோ்வாகினா்.

இதையடுத்து, சேரன்மகாதேவியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய நிா்வாகிகள் பதவியேற்றனா். அவா்களுக்கு பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் பேச்சிமுத்து சான்று வழங்கினாா். உதவிப் பொறியாளா்கள் ஜெயகணேசன், மகேஷ்வரன், விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT