ஏா்வாடி அருகே ரூ.2.06 லட்சம் பறிமுதல்
Updated On : 5 ஏப்ரல், 2024 at 6:58 PM
திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்.19இல் நடைபெறுவதையொட்டி, திருக்குறுங்குடி-ஏா்வாடி பிரதான சாலையில் பறக்கும் படை அதிகாரி ஆதிநாராயணன் தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதில் சோதனை செய்தனா். அதில், உரிய ஆவணமின்றி ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது.அதைப் பறிமுதல் செய்து, நான்குனேரி வட்டாட்சியா் ஜே
பாஸ்கரனிடம் ஒப்படைத்தனா்.
Advertisement