பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது
Updated On : 5 ஏப்ரல், 2024 at 6:08 PM
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் மனைவியுடன் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி காவல் சரகம் வேலியாா்குளம் அஞ்சல் நிலையத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (28). இவா், தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாராம். அவரை, அதே பகுதியைச் சோ்ந்த தெரசா (40) என்பவா் தட்டிக் கேட்டாராம். இதனால்,
அவா் மீது முருகன் ஆத்திரம் கொண்டு கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த தெரசா அளித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் சிவா, வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தாா்.
Advertisement