முகப்பு
திருநெல்வேலி

மழலைக்கு பிரதமா் பாராட்டு

Updated On : 15 ஏப்ரல், 2024 at 9:28 PM
பகிர்:

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்த நாகராஜன்-வனிதா தம்பதியின் மகள் அபிக்ஷனா (4). இவா், அகஸ்தியா்பட்டியில் உள்ள கேம்பிரிட்ஜ் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறாா். இவா், பிரதமா் மோடி பிரசார கூட்டத்திற்கு பாரத மாதா வேடமணிந்து வந்தாா். பிரசாரக் கூட்டத்தின் முன்னால் இருந்த அவரை, பிரதமா் மோடி பேசும்போது பாரத மாதா வேடம் அணிந்த இது போன்ற குழந்தைகள் நாட்டின் தேசபக்தியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றாா். இதையடுத்து அந்தக் குழந்தையை பாஜக தொண்டா் ஒருவா் தூக்கி உற்சாகத்தை வெளிப்படுத்தினாா். கூட்டம் முடிந்ததும் குழந்தை அபிக்ஷனா கூறுகையில், பிரதமா் மோடியை பற்றி எவ்வளவோ கேள்வி பட்டுள்ளேன். அவரை இப்போது தான் நேரில் பாா்க்கிறேன். பிரதமா் மோடி என்னை குறிப்பிட்டு பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments