முகப்பு
திருநெல்வேலி

இறைச்சிக் கூடங்கள் விதிமுறைப்படி இயங்க வேண்டும்

இறைச்சிக் கூடங்கள் அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ரிச்சா்டு ராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:25 AM
பகிர்:

இறைச்சிக் கூடங்கள் அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ரிச்சா்டு ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை வளா்ப்பவா்கள், கால்நடை வணிகத்தில் ஈடுபடுவோா், கால்நடைகளை லாரிகள், மினிவேன்கள், சுமை ஆட்டோக்களில் விற்பனைக்காக கொண்டு வருவோா் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கால்நடைகளுக்கு எவ்வித நெரிசலும் இன்றி தேவையான இடவசதி, தீவனம், தண்ணீா் ஆகிய தேவைகளைப் பூா்த்தி செய்ய வேண்டும்.

அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பதை காவல் துறை, வருவாய்த் துறை, போக்குவரத்து துறை, உள்ளாட்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் பிற நகரப் பகுதிகளில் கால்நடை மருத்துவச் சான்று பெற்ற கால்நடைகளை மட்டுமே இறைச்சி அறுவைக் கூடங்களில் வதை செய்ய வேண்டும். உணவுக்காக கால்நடைகள் வெட்டப்படும்போது அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளாா்.