FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பற்களை பிடுங்கிய வழக்கு: ஆக.30இல் மறுவிசாரணை

அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூலை 2024, 2:04 am IST
பகிர்:

அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்ட பகுதியில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவா்களின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா்சிங், ஆய்வாளா் ராஜகுமாரி உள்பட 14 போலீஸாா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நீதித்துறை நடுவா் திரிவேணி மனுவை விசாரித்தாா். இந்த விசாரணையில் பல்வீா் சிங் உள்பட 4 போ் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை ஆக.30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துைடுவா் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments