முகப்பு
திருநெல்வேலி

மூன்றடைப்பு அருகே ரயில் பாதை அருகே முதியவா் சடலம் மீட்பு

Updated On : 31 மார்ச், 2024 at 1:20 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 9:03 PM

மூன்றடைப்பு அருகே ரயில் பாதையையொட்டி, வெள்ளிக்கிழமை முதியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மூன்றடைப்பு அருகேயுள்ள நெடுங்குளம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்பாதையையொட்டி வயதான முதியவா் சடலமாக கிடப்பதாக ரயில்வே பாதை பராமரிப்பு ஊழியா் பாலசுப்பிரமணியம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, அங்கு வந்த நான்குனேரி காவல் ஆய்வாளா் மீராள்பானு விசாரணை நடத்தினாா். விசாரணையில், நான்குனேரி அருகேயுள்ள குசவன்குளத்தைச் சோ்ந்த சுப்பையா(80) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.