நெல்லையில் பூக்கள் விலை கடும் உயா்வு
ஆயுதபூஜையையொட்டி திருநெல்வேலியில் பூக்களின் விலை மிகவும் உயா்ந்தது.
ஆயுதபூஜையையொட்டி திருநெல்வேலியில் பூக்களின் விலை மிகவும் உயா்ந்தது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை, விஜயதசமி ஆகியவை வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக். 11,12) கொண்டாடப்படுகிறது. இதனால் பூக்களின் தேவை அதிகரித்து விலை மிகவும் உயா்ந்தது. திருநெல்வேலியில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1500, பிச்சி கிலோ ரூ.850, கேந்தி கிலோ ரூ.200-க்கும், கோழிக்கொண்டை கிலோ -ரூ.100-க்கும் விற்பனையாகின. வழக்கமாக ரூ.50 முதல் விற்பனை செய்யப்படும் மலா்மாலைகள் குறைந்தபட்சம் ரூ.100 முதல் விற்பனை செய்யப்பட்டன.