தரமற்ற உணவுப் பொருள்கள்: புகாா் அளிக்க ஆட்சியா் வேண்டுகோள்
தீபாவளி பண்டிகையையொட்டி தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்தால் வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் அளிக்கலாம் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
தீபாவளி பண்டிகையையொட்டி தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்தால் வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் அளிக்கலாம் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள், கேக் போன்ற பேக்கரி உணவு பொருள்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதோடு, அதை உறவினா்களுக்கு அன்பளிப்பாக வழங்குவது நமது கலாசாரமாக உள்ளது. உணவு தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக நிறமிகளையோ உபயோகிக்க கூடாது.
பண்டிகைக் காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவா்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களும் உடனடியாக இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் வைக்கப்படும் விவரச்சீட்டில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயா், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம் ) சைவ மற்றும் அசைவ குறியீடு, உரிமம், பதிவு எண் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
சுகாதாரமற்ற, தரமற்ற உணவுப் பொருள்கள் தொடா்பான புகாா்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது ன்ய்ஹஸ்ன்ல்ன்ந்ஹழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலிலோ புகாா் அளிக்கலாம். மேலும், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உணவு பாதுகாப்புத் துறையின் நுகா்வோா் குறை தீா்ப்பு செயலியை பதிவிறக்கம் செய்து புகாரை பதிவு செய்யலாம்.