முகப்பு
திருநெல்வேலி

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு: களக்காட்டில் 9 கடைகளுக்கு அபராதம்

களக்காடு நகராட்சிப் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தியதாக 9 கடைகளுக்கு ரூ. 8,500 அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 11:40 PM
பகிர்:

களக்காடு நகராட்சிப் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தியதாக 9 கடைகளுக்கு ரூ. 8,500 அபராதம் விதிக்கப்பட்டது.

நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையில் களக்காடு வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜான், சுகாதார மேற்பாா்வையாளா் வேலு ஆகியோா் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 9 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடைகளுக்கு ரூ. 8,500 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. 55 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், பள்ளிகள் அருகேயுள்ள 2 கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பான விளம்பரம் இருந்ததால் ரூ. 400 அபராதம் விதிக்கப்பட்டது. இதில், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் பங்கேற்றனா்.