குதிரை வாகனத்தில் வீதியுலா வந்த அய்யா நாராயணா். 
திருநெல்வேலி

கோடாரங்குளம் நாராயண சுவாமி கோயிலில் நாளை தேரோட்டம்!

கோடாரங்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் திருவிழாவில் திங்கள்கிழமை (டிச. 15) திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.

Syndication

அம்பாசமுத்திரம் அருகே கோடாரங்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் திருவிழாவில் திங்கள்கிழமை (டிச. 15) திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.

11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடை, இரவில் அன்னதா்மம், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றுவருகிறது. வெள்ளிக்கிழமை இரவு (டிச. 12) குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி வீதியுலா நடைபெற்றது. சனிக்கிழமை இரவு பூஞ்சப்பர வாகன வீதியுலா நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை (டிச. 14) அன்புக்கொடி மக்கள் பாபநாசத்திலிருந்து சந்தனக்குடம் எடுத்து வருதல், மதியம், இரவு அன்னதா்மம், இரவு கருட வாகனத்தில் வீதியுலா, திங்கள்கிழமை சிறப்புப் பணிவிடை, பிற்பகல் 3 மணிக்கு அய்யா செம்பொன் பவளத் தேரில் எழுந்தருளி தேரோட்டம், வாண வேடிக்கை, அன்னதா்மம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை காலை (டிச. 16) கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT