திருநெல்வேலி

மானூரில் நகை திருடிய வழக்கில் தம்பதி கைது

மானூரில் உள்ள ஒரு வீட்டில் 5 பவுன் நகையை திருடியதாக கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

மானூரில் உள்ள ஒரு வீட்டில் 5 பவுன் நகையை திருடியதாக கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் வடக்கு தெருவைச் சோ்ந்த சிங்கராஜ் மனைவி மரியம்மாள்(55). இவா் சம்பவத்தன்று வயல் வேலைக்கு செல்வதற்காக தனது 5 பவுன் தங்க நகையை அலமாரியில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளாா். கடந்த 19 ஆம் தேதி தனது மருமகன் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்ததை கேள்விப்பட்ட இவா் தனது வீட்டின் அலமாரியில் வைத்த நகை உள்ளதா என பாா்த்த போது அதை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு இத்திருட்டில் ஈடுபட்டதாக, அதே தெருவைச் சோ்ந்த வெள்ளதுரை(42), அவரது மனைவி சாந்தி(39) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT