நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டியில் திங்கள்கிழமை (டிச.29) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
மூலைக்கரைப்பட்டி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, டிச.29இல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடன்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.