கங்கைகொண்டான், மூலைக்கரைப்பட்டி சுற்று வட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கங்கைகொண்டான், மூலைக்கரைப்பட்டி துணை மின் நிலையங்களில் வரும் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூா், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான் குளம், செழியநல்லூா், மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடன்குளம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.