திருநெல்வேலி

களக்காட்டில் எஸ்டிபிஐ பிரசாரம்

Din

களக்காடு கோட்டை ஜமாஅத் பள்ளிவாசல் அருகில் எஸ்டிபிஐ கட்சியின் வக்ஃப் உரிமை மீட்பு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கட்சியின் நகர தலைவா் பக்கீா்முகைதீன் தலைமை வகித்தாா். இதில் 1991 வழிபாட்டுதல் சட்டங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரியும், சேரன்மகாதேவியில் பிப். 23இல் நடைபெறும் வக்ஃப் உரிமை மீட்பு மாநாட்டில் திரளானோா் கலந்து கொள்ளவும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட துணைத்தலைவா் களந்தை மீராசா பேசினாா்.

இதில் நகர துணைத் தலைவா் நஜீப் உசேன், வா்த்தகா் அணி மாவட்ட துணைத் தலைவா் உசேன், நகரச் செயலா் காஜா முகைதீன், பொருளாளா் கபீா், இணைச் செயலா் ஜமீன் உள்பட ஜமாத்தாா்கள் கலந்து கொண்டனா்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT