முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் சூறைக் காற்றில் 7ஆயிரம் வாழைகள் சேதம்

சேரன்மகாதேவியில் சூறைக் காற்று வீசியதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

Updated On : 1 ஜனவரி, 2025 at 11:55 PM
வாழை - சேதமடைந்த வாழைகள்.
பகிர்:

சேரன்மகாதேவியில் சூறைக் காற்று வீசியதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாள்களாக மிதமான மழை பெய்தது. சேரன்மகாதேவி பகுதியில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில் சேரன்மகாதேவியில் தாமிரவருணி கரையோரத்தில் அம்மநாத சுவாமி கோயில் பகுதியில் அறுவடை செய்யும் பருவத்தில் இருந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனா். இதையடுத்து அப் பகுதியைப் பாா்வையிட்ட வருவாய்த் துறையினா் சேதம் குறித்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்துள்ளனா்.