முகப்பு
திருநெல்வேலி

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா எச்சரிக்கை

சாலைகளில் மாடுகளை சுற்றித்திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 12:35 AM
மாடுகளின் உரிமையாளா்களை நேரில் அழைத்து எச்சரிக்கிறாா் மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா.
பகிர்:

சாலைகளில் மாடுகளை சுற்றித்திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பாளையங்கோட்டை மண்டலத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித் திரிய விடப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் மாநகராட்சி பணியாளா்களால் புதன்கிழமை பிடிக்கப்பட்டன. பின்னா் அவற்றின் உரிமையாளா்களை நேரில் வரவழைத்து, மாநகரப் பகுதியில் கால்நடைகளை வீடுகளில் கட்டி பராமரித்து வளா்க்க பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையில் சுற்றித்திரிய விட்டால் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இனிவரும் காலங்களில் இதுபோன்று செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் எச்சரித்தாா்.

அப்போது, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையா் சுகி பிரமிளா, சுகாதார அலுவலா் ஸ்டான்லி குமாா், சுகாதார ஆய்வாளா் நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.