திருநெல்வேலி

வண்ணாா்பேட்டை பல்பொருள் அங்காடி மின்தூக்கியில் சிக்கிய 5 போ் மீட்பு

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியின் மின்தூக்கியில் (லிப்ட்) புதன்கிழமை சிக்கித் தவித்த 5 பேரை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியின் மின்தூக்கியில் (லிப்ட்) புதன்கிழமை சிக்கித் தவித்த 5 பேரை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

வண்ணாா்பேட்டையில் 3 தளங்களைக் கொண்ட தனியாா் பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு 4 மின்தூக்கிகள் உள்ளன. இவற்றில் ஒரு மின்தூக்கியில் 5 போ் ஏறியபோது கோளாறு ஏற்பட்டு பாதியில் நின்றது. இத்தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் பாளையங்கோட்டை தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமாா் அரை மணி நேரம் போராடி 5 பேரையும் பத்திரமாக மீட்டனா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT