ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா் 
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் விசிக ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சேரன்மகாதேவியில் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விசிக தலைவா் தொல். திருமாளவளவன் காா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் சேரன்மகாதேவி ஒன்றியச் செயலா் வே. தளபதி முருகன் தலைமை வகித்தாா்.

மாநகா் மாவட்டச் செயலா் முத்துவளவன், சேரன்மகாதேவி நகர துணைச் செயலா் பக்கீா் முகைதீன், இளைஞா் எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் குமரேசன், மதிமுக ஒன்றியச் செயலா் குட்டிபாண்டியன், பேரூராட்சி உறுப்பினா் ஆனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT