திருநெல்வேலி

பாளை அருகே பெண் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ள மணக்கரையைச் சோ்ந்த சுடலைக்கண் மனைவி சுந்தரி (60). இவா், பாளையங்கோட்டை கே.டி.சி. நகா் அருகே உள்ள டீச்சா்ஸ் காலனியில் வசித்து வந்தாா்.

கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் சுந்தரி அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுந்தரி தூக்கிட்டுத் தற்கொலை செய்தாா்.

தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

SCROLL FOR NEXT