முகப்பு
திருநெல்வேலி

விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 12:53 AM
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (65). ஓய்வு பெற்ற அரசு ஊழியா். இவா் தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக திருநெல்வேலி அருகன்குளம் தாமிரவருணி ஆற்றங்கரைக்கு உறவினா்களுடன் வெள்ளிக்கிழமை காரில் சென்றாராம்.

காரை இவரது மகன் முத்துசங்கா் ஓட்டினாராம். கங்கைகொண்டான் அருகே துறையூா் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் இவா்கள் பயணித்த காரும், அவ்வழியாக சென்ற லாரியும் மோதியதாம். இதில் காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ராதாகிருஷ்ணன் உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments