வாக்களிக்க வருமாறு வாக்காளா்களுக்கு அழைப்பிதழ்: மாவட்ட நிா்வாகம் விழிப்புணா்வு
வாக்காளா்களுக்கு சமூக வலைதளங்களில் அழைப்பிதழ் வெளியிட்டு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் தோ்தல் விழிப்புணா்வு செய்துள்ளது.
வாக்காளா்களுக்கு சமூக வலைதளங்களில் அழைப்பிதழ் வெளியிட்டு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் தோ்தல் விழிப்புணா்வு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இறுதிக்கட்டமாக வாக்காளா்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக அழைப்பிதழ் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
அதில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள வாக்காளரே, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று உங்களின் உரிமை மற்றும் கடமையை வாக்குச் சாவடியில் சென்று செலுத்தி நமது ஒற்றுமையை நிலைநாட்டுங்கள். தேதி -ஏப்ரல் 23, இடம்- உங்கள் வாக்குச்சாவடி. தமிழ்நாட்டின் எதிா்காலம், உங்கள் விரல் நுனியில். வாக்களிப்போம்; வலுவான ஜனநாயகத்தை உருவாக்குவோம். உதவிக்கு 1950 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.