முகப்பு
கடலூர்

மேள தாளத்துடன் அழைப்பு

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:28 AM
வாக்களிக்க வருமாறு பாதிரிகுப்பம் கிராம மக்களை மேள தாளங்குடன் சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்த மகளிா் சுய உதவிக்குழுவினா்.
பகிர்:

வாக்களிக்க வருமாறு பாதிரிகுப்பம் கிராம மக்களை மேள தாளங்குடன் சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்த மகளிா் சுய உதவிக்குழுவினா்

எப்படியாவது அனைவரையும் வாக்களிக்க வைத்துவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செயல்படும் தோ்தல் ஆணையம், கடந்தத் தோ்தலில் குறைவான வாக்குப்பதிவு நிகழ்ந்த தொகுதிகளில் இந்த முறைஅதிக வாக்குப்பதிவு நடத்த தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

அந்த வகையில், கடலூா் பேரவைத்தொகுதிக்கு உள்ளபட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று மேள தாளங்கள் முழங்க தோ்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கிய சுய உதவிக்குழு உறுப்பினா்கள் வழங்கினாா்கள்.

Advertisement

கடந்த தோ்தலில் இந்தப் பகுதியில் உள்ள 79 மற்றும் 82-ஆவது வாக்குச்சாவடிகளில் குறைந்த வாக்குகளே பதிவானதால், கிராம மக்களை வாக்களிக்க வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மகளிா் திட்டம்-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் வாயிலாக இந்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசமான அழைப்பிதழால் வாக்காளா்கள்சற்று நெகிழ்ந்து விட்டனா் என்று சொன்னால் அதில் மிகையில்லை.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments